குழந்தைகளுக்கு பள்ளிக்கு கொடுத்து அனுப்ப மட்டுமல்லாது பெரியவர்களும் விரும்பும் குடைமிளகாய் புதினா புலாவ். புலாவ் செய்வது எப்படி என பார்க்கலாம் வாங்க
குடைமிளகாய் புதினா புலாவ்
தேவையானவை:-
பாசுமதி அரிசி – ஒரு கப்
குடைமிளகாய் – இரண்டு
வெங்காயம், தக்காளி – தலா ஒன்று,
புதினா, கொத்தமல்லித்தழை – தலா ஒரு கைப்பிடி அளவு,
இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்,
பட்டை – சிறு துண்டு,
பெருஞ்சீரகம் – கால் டீஸ்பூன்,
எண்ணெய், நெய், உப்பு – தேவையான அளவு.
புதினா புலாவ் செய்முறை:
வெங்காயம், தக்காளியை கொஞ்சம் நீள நீளமாக, மெல்லியதாக நறுக்கி கொள்ளவும். குடைமிளகாயை எடுத்து சதுரமாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் பாசுமதி அரிசியை நன்றாக கழுவி உதிரியாக வடிக்க வேண்டும். நல்ல அடி கனமான வாணலியை எடுத்து எண்ணெய், நெய் விட்டு, சூடானதும் பட்டை, பெருஞ்சீரகம் போட்டு தாளித்து பின்னர் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி – பூண்டு விழுதைச்சேர்த்து வதக்கவும். இஞ்சி பூண்டின் வாசனை போனவுடன் அதனுடன் தக்காளி, புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்துக் சிறிது கிளறி விட வேண்டும்.
தக்காளி குழைய வதங்கியதும் இதனுடன் நறுக்கிய குடைமிளகாய், உப்பு சேர்த்து நன்றாக வதக்கி பிறகுவடித்த சாதத்தில் இந்தக் கலவையை சேர்த்து நன்கு கிளறி பரிமாறவும்.
இப்போது உங்கள் முன் இருப்பது தான் குடைமிளகாய் புதினா புலாவ். சுவைத்து மகிழுங்கள்.