புதுச்சேரி மாநிலத்தில் முதல்வர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. புதுச்சேரியில் ஆளுநராக இருக்கும் கிரண்பேடி ஆளும்கட்சிக்கு குடைச்சல் கொடுத்துக்கொண்டிருந்தார். இந்த நிலையில் ‘ஆப்பரேஷன் லோட்டஸ்’ என்ற பெயரில் புதுச்சேரியில் பா.ஜ.க தேர்தல் பணியை தொடங்கியுள்ளது. அதில் முதல் விக்கெட்டாக காங்கிரஸ் அமைச்சர் நமச்சிவாயம் பொதுப்பணித்துறை அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார்.
நேற்று டில்லி புறப்பட்டுச் சென்ற அவர் இன்று பா.ஜ.க-வில் சேர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பா.ஜ.க தேசிய தலைவர் நட்டா முன்னிலையில் அவர் தன்னை பா.ஜ.க-வில் இணைத்துக்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அமித்ஷா லிட்டோரையும் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய தென் மாநிலங்களில், விரைவில் சட்டசபை தேர்தல் நெருங்கும் சூழலில் நமச்சிவாயம் ராஜினாமா காங்கிரஸ் கட்சிக்கு அதிரச்சியை ஏற்படுத்தியுள்ளது.