நடிகை கரீனா கபூரும் நடிகர் சயிப் அலி கானும் 2012-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். அவர்களுக்கு 2016-ல் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு தைமூர் அலி கான் எனப் பெயரிட்டனர். இந்த நிலையில் இரண்டாவது குழந்தையை விரைவில் எதிர்பார்ப்பதாக கரீனா கபூரும் சயிப் அலி கானும் கடந்த ஆகஸ்ட் மாதம் தகவல் வெளியிட்டனர்.
இந்நிலையில் நடிகை கரீனா கபூருக்கு மீண்டும் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதுபற்றி கரீனாவின் கணவர் சயிப் அலி கான் கூறுகையில், ”எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் நலமாக உள்ளார்கள். ரசிகர்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி” என குறிப்பிட்டுள்ளார். கரீனா கபூர் நடிகர் அமீர்கானின் அடுத்த படமான லால் சிங் சத்தா-வில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.