தருமபுரி அன்னசாகரம் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றிய சுதந்திர போராட்ட பெண் தியாகி சிவகாமி அம்மையாரை மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் சந்தித்துப் பேசினார். அதுபற்றி தனது ட்விட்டர் பக்கத்தில், “அன்னசாகரம் சிவகாமி அம்மாள், நேதாஜியின் இந்திய தேசியப் படையில் சேர்ந்து வெள்ளையருக்கு எதிராகப் போரிட்டார். கொள்ளையருக்கு எதிரான என் போருக்கான வாழ்த்துக்களை இன்று அவரிடம் பெற்றுக்கொண்டேன்” என பதிவிட்டார்.
பின்னர் தருமபுரி பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே பிரசாரம் மேற்கொண்ட கமல்ஹாசன் பேசுகையில், “எனக்கு நீச்சல் பழகி கொடுத்தவர் எம்.ஜி.ஆர். நல்லவர்கள் எவரும் எம்.ஜி.ஆரை சொந்தம் கொண்டாடலாம். அவரை யாரும் பட்டாபோட்டு வைத்துக்கொள்ள முடியாது” என்றார்