பெண் ஊழியரை ஆபாசமாக படம் எடுத்ததாக கூறி மிரட்டி உள்ளதால் மாநகராட்சி ஆஸ்பத்திரி தூய்மைப் பணியாளர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். முன்னதாக அவர் தனது சாவுக்கு 3 பேர் காரணம் என்கிற வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.தற்போது இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவையை அடுத்த குனியமுத்தூர் அருகே உள்ள பி. கே புதூரை சேர்ந்தவர் ரங்கசாமி. இவருடைய வயது 42. இவர் கோவையில் உள்ள ஒரு மாநகராட்சி ஆஸ்பத்திரியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்துள்ளார்.வழக்கம்போல பணிக்கு சென்ற ரங்கசாமி மன அழுத்தத்துடன் வீட்டுக்கு வந்துள்ளார். அவர் திடீரென்று எலி மருந்தை குடித்து மயங்கி விழுந்துள்ளார்.இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவருடைய மனைவி ரங்கசாமியை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்.அங்கு சிகிச்சை பலனின்றி ரங்கசாமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இதுகுறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் ரங்கசாமி தற்கொலை செய்வதற்கு முன்பு தனது செல்போனில் ஒரு வீடியோ பதிவு செய்துள்ளார் அந்த பதிவை பலருக்கும் அனுப்பியுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் என்ன பேசி உள்ளார் என்பதை பற்றி முழு விவரம் ஆக பார்ப்போம்… மாநகராட்சி ஆஸ்பத்திரியில் உள்ள மெடிக்கலில் வேலை பார்க்கும் ஒருவரும் கணினி பிரிவில் வேலை பார்க்கும் ஆஸ்பத்திரியில் உள்ள ஒருவரும் அறையில் தனிமையில் இருந்தனர்.அதை நான் பார்த்து விட்டேன் எனவே நான் செய்யாத காரியத்தை செய்த தாக கூறி பணியில் இருந்து வெளியில் அனுப்பும் முயற்சியில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர்.இளம் பெண் உடை மாற்றுவதை நான் வீடியோ மற்றும் போட்டோ எடுத்ததாக அந்த இளம் பெண்ணும் ஒரு வாலிபரும் மற்றும் ஒரு நர்சு ஆகிய மூன்று பேரும் என் மீது செய்யாத குற்றத்தை சுமத்தி வருகின்றனர்.

என்னைப் பற்றி தவறான தகவல்களை மருத்துவர்களிடம் கூறி வருகின்றனர்.தேவையில்லாமல் நான் செய்யாத தவறை செய்ததாக கூறி மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றனர். என் சாவுக்கு அவர்கள் 3 பேர் தான் காரணம் என்று அந்த பதிவில் அவர் கூறியுள்ளார். தனது தற்கொலைக்கு காரணமானவர்கள் மூன்று பேரின் பெயரை குறிப்பிட்ட ரங்கசாமி பதிவு செய்த வீடியோ கோவை மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இதனை அடுத்து ரங்கசாமியின் தற்கொலைக்கு காரணமான மருத்துவமனை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அவரது மகள் மற்றும் உறவினர்கள் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்