ஆப்பிள் நிறுவனமானது தனது மேக்புக் ஏர் மாடலை குறைந்த எடையில், மெல்லிய வடிவமைப்பில் உருவாக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. புதிய மேக்புக் ஏர் இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உருவாகியிருக்கும் இந்த புதிய மேக்புக் ஏர் ஆப்பிள் நிறுவனத்தின் மேக்சேப் சார்ஜிங் தொழில்நுட்பம் மற்றும் அடுத்த தலைமுறை மேக் பிராசஸர்களை கொண்டிருக்கும் என்றும் மேக்புக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதிய மாடலில் 4 யுஎஸ்பி போர்ட்கள் வழங்கப்பட இருக்கிறது. மேலும் இது தற்சமயம் விற்பனை செய்யப்படும் மேக்புக் ஏர் மாடலின் உயர் ரக வெர்ஷனாக இருக்கும். இதனால் இது தற்போதைய வெர்ஷன் என்ட்ரி-லெவல் மாடலாக இருக்கும்.
மேலும் புதிய மேக்புக் ப்ரோ மாடல்களில் முன்பை போன்றே எஸ்டி கார்டு ஸ்லாட்களை வழங்கவும் ஆப்பிள் திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.