பாகிஸ்தான் ராணுவம் மற்றும் தீவிரவாத அமைப்புகள் அடிக்கடி இந்திய எல்லையில் அத்துமீறுவதும், தாக்குதல் நடத்துவதும் வழக்கம். இதற்காக அவர்கள் பல்வேறு யுக்திகளக் கையாண்டு எல்லௌ தாண்டிய பயங்கரவாதத்தை அரங்கேற்றுகின்றனர்.
இந்த அத்துமீறல்களுக்கு நமது ராணுவம் தக்க பதிலடி கொடுப்பதும் வழக்கம். இந்த நிலையில் பாகிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள கத்துவா மாவட்டப் பகுதியில் நம் நாட்டு எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதர் மண்டிக் கிடந்த பகுதியில் ஒரு பள்ளம் இருப்பதை பார்த்தனர். அது பாகிஸ்தானில் இருந்து அமைக்கப்பட்டிருந்த ரகசிய சுரங்கப்பாதை என்பது தெரிய வந்தது.
சுமார் 30 அடி ஆழத்திலும், மூன்று அடி அகலத்திலும் அமைக்கப்பட்டிந்த அந்த சுரங்கப்பாதையை 150 மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. கடந்த ஆறு மாதகாலத்திற்குள் கண்டுபிடிக்கப்பட்ட மூன்றாவது சுரங்கப்பாதை இது என்பது குறிப்பிடத்தக்கது.