இந்தியா- சீனா உறவு குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆன்லைன் கருத்தரங்கத்தில் பேசினார். அப்போது அவர் பேசுகையில், “எல்லைக் கட்டுப்பாடு பகுதியை கண்காணிப்பது சம்பந்தமாக இரண்டு நாடுகளுக்குமிடையேயான ஒப்பந்தம் முழுமையாக பின்பற்றபட வேண்டும். நாட்டின் எல்லையை ஆக்கிரமிக்கும் எண்ணத்தை சீனா கைவிட வேண்டும்.
எல்லையில் பதற்றம் ஏற்படாமல் அமைதி நிலவினால் மட்டுமே இந்தியாவுக்கும் சீனவுக்குமான உறவு மேம்படும். இல்லையென்றான் இரண்டு நாடுகளுக்கும் இடையே நட்புறவு ஏற்படாது. லடாக் எல்லைக் கட்டுப்பாடு பகுதியின் நிலையை தன்னிச்சையாக மாற்றும் சீனாவின் எந்த முயற்சியையும் இந்தியா அனுமதிக்காது. எல்லையில் நிலவும் பதட்டம் இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளையும் மட்டுமின்றி உலகுக்கே பாதிப்பை ஏற்படுத்தும்” என்றார்.