மதுரை சோலையழகுபுரம் பகுதியை சேர்ந்தவர் காதர் மஸ்தான் இவருடைய வயது (30), ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில் இவரை நேற்று காலை அடையாளம் தெரியாத சிலர் தாக்கியதாக தெரியவந்துள்ளது.
மேலும், அவரது ஆணுறுப்பு சிதைக்கப்பட்ட நிலையில் இவரது சடலம் ஜீவா நகர் 2ஆவது தெருவில் கிடந்துள்ளது. சடலத்தை போலீசார் கைப்பற்றி அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீஸார் தற்போது விசாரித்து வருகிறார்கள்